மும்பை: மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 9 பேர் காயமடைந்துள்ளதாகவும், இரண்டு பேரை காணவில்லை என்றும், அவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பால்கர் மாவட்டத்தின் விரார் கிழக்கில் உள்ள நான்கு மாடி கட்டிடமான ரமாபாய் அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி செவ்வாய்க்கிழமை இரவு இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 2 பேரை காணவில்லை அவர்களைக் கண்டுபிடிக்க மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது என்று வசாய் விரார் நகராட்சியின் கூடுதல் ஆணையர் சஞ்சய் ஹிர்வாடே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.