மும்பை: மகாராஷ்டிராவின் ஜல்கானில் நடந்த சந்த் முக்தாய் யாத்திரையின் போது தனது மைனர் மகளும் அவரது தோழிகளும் சில ஆண்களால் துன்புறுத்தப்பட்டதாக குற்றம்சாட்டி, பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்‌ஷா காட்சே ஞாயிற்றுக்கிழமை (மார்ச்.03) வழக்கு பதிவு செய்துள்ளார். அதற்கு குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படுவர் என முதல்வர் பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்து வழக்கு பதிவு செய்த பின்பு செய்தியாளர்களிடம் பேசிய காட்சே, "ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியின் போது, இந்தத் பகுதியில் சந்த் முக்தாய் யாத்திரை நடைபெறும். இரண்டு நாட்களுக்கு எனது மகளும் அந்த யாத்திரையில் பங்கேற்றார். அப்போது சில இளைஞர்கள் அவரை துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய நான் காவல்நிலையம் வந்தேன்" என்று தெரிவித்தார்.