புதுடெல்லி: "இந்தியாவின் மகத்துவத்தை மகா கும்பமேளாவின் வடிவத்தில் முழு உலகமும் கண்டது. மகா கும்பமேளாவில் ஒரு தேசிய விழிப்புணர்வை நாங்கள் கண்டோம். இது புதிய சாதனைகளுக்கு ஊக்கமளிக்கும்" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மக்களவையில் மகா கும்பமேளா தொடர்பாக உரை நிகழ்த்திய பிரதமர் நரேந்திர மோடி, “மகா கும்ப மேளாவில் குறைந்தது 66 கோடி பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரான்சின் மக்கள்தொகையை விட இது கிட்டத்தட்ட 10 மடங்கு. மகா கும்பமேளாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு வழிவகுத்த நாட்டு மக்களுக்கு நான் தலைவணங்குகிறேன். மகா கும்பமேளாவின் வெற்றி, எண்ணற்றோரின் பங்களிப்புகளின் விளைவாகும். இந்தியா, உத்தரப் பிரதேசம் மற்றும் பிரயாக்ராஜ் மக்களுக்கு நன்றி கூறுகிறேன்.