கடந்த 2024 மக்களவை தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் திரட்டிய பணத்தை முழுமையாக செலவிடவில்லை. இதனால் பாஜக, தெலுங்கு தேசம் உள்ளிட்ட 6 கட்சிகளின் இருப்பு நிதி தேர்தலின் தொடக்கத்தில் இருந்ததை விட தேர்தலின் முடிவில் ரூ.4,300 அதிகரித்துள்ளது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கான செலவு அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்துள்ளன. இந்த அறிக்கைகளை காமன்வெல்த் மனித உரிமைகளுக்கான நடவடிக்கை (சிஎப்ஆர்ஐ) என்ற தன்னார்வ அமைப்பு பகுப்பாய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.