“மக்களவைத் தொகுதிகளின் மறுசீரமைப்பு தமிழகத்துக்கு ஆபத்தாக முடியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்” என்கிற வேண்டுகோளோடு இன்று (5.3.2025) அனைத்துக் கட்சிகளையும் கூட்டுகிறார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இது ஒரு கற்பனை பயம், அச்சப்படத் தேவையில்லை என்று சில கட்சிகள் சொல்கின்றன.
மக்களவை மறுசீரமைப்பு தமிழகத்துக்குக் கிடைத்துவரும் அதிகாரப் பகிர்வைக் குறைத்துவிடும் என்று நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, இதே ‘கருத்துப் பேழை’ பகுதியில் ஒரு கட்டுரை எழுதினேன் (’தமிழகம் ஏன் தண்டிக்கப்படுகிறது?’, 23.9.2021). அப்போதைக் காட்டிலும் இப்போது அபாயம் அதிகரித்துவிட்டது. எப்படி?