புதுடெல்லி: “2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் மக்களால், மக்களுக்காகவே உருவாக்கப்பட்ட பட்ஜெட். இதில் நடுத்தர வர்க்கத்தினரின் குரல்களுக்கு நாங்கள் செவி கொடுத்திருக்கிறோம்.” என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேசிய நிர்மலா சீதாராமன் அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் புகழ்பெற்ற பேச்சை மேற்கோள் காட்டி பட்ஜெட் குறித்து பெருமிதம் தெரிவித்தார்.