முர்ஷிதாபாத்: மேற்கு வங்கத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத்துக்கு சென்று வந்த பின்பு பேசிய அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், "அங்கு நடந்தது காட்டுமிராண்டித்தனமானது; அதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழக்கூடாது" என்று தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ் வன்முறையால் பாதிக்கப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்துக்கு சனிக்கிழமைச் சென்றார். அங்கு பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தப் பின்பு செய்தியாளர்களிடம் கூறுகையில், "அங்கு என்ன நடந்தவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமானது, வினோதமானது. இதுபோன்ற சம்பவம் எதிர்காலத்தில் மீண்டும் நிகழக் கூடாது. மக்கள் அனைவரும் பீதியில் உள்ளனர். அங்கு இயல்பு நிலை மீண்டும் கொண்டுவரப்படவேண்டும். நம்மைப் பாதுகாக்க ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.