குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தொகுதி மறுவரையறை மூலம் மத்திய அரசு வஞ்சிக்க முயற்சிப்பதாக சென்னையில் நடைபெற்ற கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் கேளரா, தெலங்கானா, பஞ்சாப் முதல்வர்கள் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சி பிரதிநிதிகள் அடங்கிய முதல் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர்கள் பேசியதாவது: