புதுடெல்லி: டெல்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பு வெளியிட்டுள்ள தேர்தலுக்கு பிந்தைய கணிப்புகளை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங் இன்று நிராகரித்துள்ளார்.
அவர் கூறுகையில், "மசாஜ் மற்றும் ஸ்பா நடத்தும் நிறுவனங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தினால், அந்த கருத்து கணிப்புகளின் நிலை என்னவாக இருக்கும் என்று நீங்கள் நினைத்து பாருங்கள். பிப்ரவரி 8ம் தேதி வரை காத்திருக்குமாறு உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். நாங்கள் எழுப்பும் பிரச்சினைகளை மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.