மதுரை: அழகன்குளம் அகழாய்வுப் பொருட்களுக்கு மண்டபத்தில் அருங்காட்சியம் அமைப்பதற்கு பதில், அழகன்குளத்திலேயே அருங்காட்சியம் அமைக்கக் கோரும் மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க தொல்லியல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தைச் சேர்ந்த என்.பி.அசோகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளம் இரு பக்கம் கடலாலும், ஒரு பக்கம் வைகை நதியாலும் சூழப்பட்ட ஊராகும். அழகன்குளத்தில் தான் வைகை ஆறு வங்காள விரிகுடாவில் கலக்கிறது. அழகன்குளம் கோட்டைமேடு பகுதியில் 1984-ல் பழங்கால நாணயம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அழகன்குளத்தில் அகழாய்வு நடத்தப்பட்டது.