’மண்டாடி’ கதையின் நாயகனாக சூரி தேவைப்பட்டது ஏன் என்பதற்கான காரணத்தை இயக்குநர் மதிமாறன் தெரிவித்துள்ளார்.
’மண்டாடி’ படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ‘மண்டாடி’ குறித்து இயக்குநர் மதிமாறன் பேசும் போது, “சூரி சாரின் காமெடியன் டூ கதாநாயகன் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது. அவருக்கென்று எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது.