சத்தர்பூர்: மகா கும்பமேளா குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் "இப்போதெல்லாம் சில தலைவர்கள் குழு, மதத்தை கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது" என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூரில் பாகேஷ்வர் தாமில், புற்றுநோய்க்கான மருத்துவம் மற்றும் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு பிரதமர் மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அடிக்கல் நாட்டினார். பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "சில தலைவர்கள் குழு, மதத்தைக் கேலி செய்தும், மக்களை பிளவுபடுத்தவும் முயற்சி செய்கிறது. பல நேரங்களில் அந்நிய சக்திகள் அவர்களுக்கு உதவி செய்து இந்தியாவையும் அதன் மதத்தையும் பலவீனப்படுத்த முயற்சிக்கின்றன. இந்து நம்பிக்கைகளை வெறுக்கும் மக்கள், பல நூற்றாண்டுகளாக ஏதோ ஒரு கட்டத்தில் வாழ்ந்து வருகின்றனர்.