புதுடெல்லி: சுமார் 1,500 பேருக்கும் அதிகமான பெண்களை முஸ்லிமாக மதம் மாற்றியக் குற்றவாளி சாங்குர் பாபா (எ) ஜலாலுதீன். இவர் உபியின் பல்ராம்பூரில் இருந்தபடி அரபு நாடுகளின் நிதி உதவியால் வட மாநிலப் பெண்களை மதமாற்றம் செய்து வந்துள்ளார்.
கடந்த ஜூலை 4-ல் சாங்குர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்றும் நண்பர்களான நீத்து நவீன் ரொஹரா என்கிற நஸ்ரீன், அவரது கணவர் நவீன் ரொஹரா ஆகியோர் கைதாயினர். நீதிமன்றக் காவலில் உள்ள இவர்களிடம் உத்தர பிரதேச தீவிரவாத தடுப்புபடை (ஏடிஎஸ்) நடத்தும் விசாரணையில் பல அதிர்ச்சியானத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில், இந்த கும்பலுக்கு தமிழ்நாட்டின் சிலருடன் தொடர்பு இருப்பது தெரிந்துள்ளது.