புதுச்சேரி: புதுச்சேரியில் 6 புதிய மதுபான தொழிற்சாலை அனுமதிக்கு ரூ.15 கோடி கையூட்டு பெற்றிருக்கிறார்கள். அனைவரும் சேர்ந்து கூட்டுக்கொள்கை அடிக்கிறார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு மும்மொழிக் கொள்கையை இந்தியா முழுவதும், நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது, புதுச்சேரியில் காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியில் அதை வரவிடாமல் நாங்கள் தடுத்தோம். தற்போதுள்ள முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மோடிக்கு அடிபணிந்து, புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து மும்மொழி கொள்கை மூலம் இந்தியை நேரடியாக திணிக்கிறார்கள்.