மதுரை: மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று திறந்து வைத்தார்.
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்தில் வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைக்கும் பணி 2 ஆண்டுகளாக நடந்து வந்தது. சர்வதேச போட்டிகளுக்கான தரத்தில் அமைக்கப்பட்டுள்ள மைதானம், இளம் விளையாட்டு வீரர்களுக்கான திறன்வள மேம்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.