மதுரை: மதுரையில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பரமக்குடியில் இருந்து மதுரை வந்து கொண்டிருந்த தனியார் பேருந்து, லாரியின் பின்பகுதியில் மோதியது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பேருந்துக்குள் சிக்கிய பயணிகள் கிரேன் உதவியுடன் மீட்பு குழுவினர் மீட்டு வருகின்றனர். இந்த கோர விபத்தில் பயணி ஒருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். இதில் படுகாயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். மேலும் இதைத்தொடர்ந்து, மீட்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
The post மதுரையில் லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.