மதுரை: மதுரை காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூவேந்திரன் என்பவரை காவல்துறை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது. துப்பாக்கிச் சூட்டில் காயம் அடைந்த மூவேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். கடந்த 19-ம் தேதி தனிப்படை காவலர் மலையரசன் சாலையோரம் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் மூவேந்திரனை கைது செய்தனர். தனது ஆட்டோவில் சென்ற மலையரசனை பணத்திற்காக ஓட்டுநர் மூவேந்திரன் கொன்றது அம்பலமானது.
The post மதுரை காவலர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூவேந்திரன் என்பவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தது காவல்துறை appeared first on Dinakaran.