மதுரை: மதுரை மாநகராட்சியில் போதுமான கார், ஜீப்கள் இல்லாததால் உயர் அதிகாரிகளின் கள ஆய்வுக்கு தனியார் ‘டாக்ஸி’களை வாடகைக்கு எடுப்பது தெரியவந்துள்ளது. இந்த வகையில் ரூ.28 லட்சத்து 56 ஆயிரம் வழங்க மாநகராட்சியின் ஒப்புதலுக்குத் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு தனித்தனியாக கார் வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர துணை ஆணையர்கள், 5 உதவி ஆணையர்கள், கல்வி அலுவலர், உதவி ஆணையர் (வருவாய்), உதவி ஆணையர் (கணக்கு), செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், பொறியியல் துறையில் தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், 5 செயற்பொறியாளர்கள், 5 உதவி செயற் பொறியாளர்கள், நகரமைப்புப் பிரிவில் செயற்பொறியாளர் (திட்டம்), 5 உதவி செயற்பொறியாளர்கள் (திட்டம்), சுகாதார நகர் நல அலுவலர், உதவி நகர் நல அலுவலர் மற்றும் சட்ட அலுவலர் உள்ளிட்டோருக்கு 38 கார், ஜீப்கள் வழங்கப்பட்டுள்ளன.