மதுரை: மதுரை மாநகராட்சி விரி விதிப்பில் முறைகேடு தொடர்பான வழக்கை ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி 83வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரவி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘ மதுரை மாநகராட்சியில் பெரிய அளவில் சொத்து வரி விதிப்பு முறைகேடு நடைபெற்றது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கு முறையான வரி செலுத்தாமல் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைகேடு தொடர்பாக முந்தைய மாநகராட்சி ஆணையர் மதுரை மாநகர் காவல் ஆணையரிடம் 2024-ல் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் பல மாதங்கள் தாமதத்துக்கு பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.