டெல்லி: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் நிலை என்ன? என திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை மெட்ரோ திட்டத்திற்கு மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு தொடங்கிவிட்டதா என மாநிலங்களவையில் கேள்வி எழுப்பியுள்ள திமுக எம்.பி. திருச்சி சிவா, திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் ஒப்புதல் அளிப்பதற்கான காலக்கெடு போன்ற விவரங்களையும் கேட்டுள்ளார்.
மற்ற நகரங்களில் உள்ள மெட்ரோ திட்டங்கள் விரைவான ஒப்புதல்களைப் பெற்றுள்ள நிலையில் மதுரை மெட்ரோ திட்டம் மட்டும் அங்கீகரிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? சர்வதேச நிதியைப் பெறுவதற்கான தற்போதைய நிலை மற்றும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) வெளிப்படுத்திய ஆர்வத்தை திட்டத்தின் நிதி திட்டமிடலுடன் ஒருங்கிணைக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன என்கிற கேள்விகளுக்கும் அவர் நாடாளுமன்றத்தில் பதில் கேட்டுள்ளார்.
The post மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் நிலை என்ன?.. திமுக எம்.பி திருச்சி சிவா கேள்வி appeared first on Dinakaran.