மதுரை: மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியின் களப்பணி திமுக தொண்டர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால், இத்தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கட்சியினர் தெரிவித்துள்ளனர். மதுரை மாநகரைச் சேர்ந்த மேற்கு சட்டப்பேரவை தொகுதியை அமைச்சர் பி.மூர்த்தியிடம் திமுக தலைமை ஒப்படைத்தது. இதற்கு மிக முக்கிய காரணம் இத்தொகுதியில் 3 முறை தொடர் தோல்வியை சந்திக்கும் திமுக, வரும் தேர்தலில் வெல்ல வேண்டும் என்பதே.
மாநகரை 2 மாவட்டமாகப் பிரித்து புதிதாக ஒருவர் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்படு வார் என எதிர்பார்த்த நிலையில், ஒரு தொகுதியை மட்டும் பிரித்து மூர்த்தியிடம் ஒப்படைத்தது மாநகர் நிர்வாகிகளிடையே திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகர் ஒட்டுமொத்த திமுகவினரிடையே சலசலப்பை உருவாக்கியுள்ளது. 3 முறை தொடர்ந்து தோல்வியை சந் தித்த திமுக, அமைச்சர் மூர்த்தியிடம் தொகுதியை ஒப்படைத்ததுமே வெற்றி பெற்றுவிடுமா, இது என்ன மாயாஜாலமா? என்ற கேள்வி திமுகவினரிடம் மட்டு மின்றி அதிமுகவினரிடையேயும் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.