சென்னை: மத்திய அரசின் இஎஸ்ஐ திட்டத்தின் மூலம் முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் எஸ்.விஜய் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
இந்தியாவில் வேலைவாய்ப்புடன் கூடிய ஊக்கத்தொகை வழங்கும் இஎல்ஐ இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ரூ.99,446 கோடி நிதி ஒதுக்கியது. முதல்முறையாக பணியில் சேரும் இளைஞர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனம் இருதரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.