சென்னை: “மத்திய அரசின் திட்டங்களை காப்பி அடிப்பதே முதல்வர் ஸ்டாலினின் வேலை” என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
சென்னை புரசைவாக்கம் வெள்ளாள தெருவில் மத்திய அரசின் ‘மக்கள் மருந்தகம்’ கடை செயல்பட்டு வருகிறது. அப்பகுதியில் சிறப்பாக செயல்பட்டு வரும் அந்த ‘மக்கள் மருந்தகம்’ கடையின் கொண்டாட்ட நிகழ்ச்சி இன்று (மார்ச் 7) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, மக்கள் மருந்தகத்தை பார்வையிட்டு, கடையின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.