மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் மூன்று புதிய மசோதாக்களை அறிமுகம் செய்துள்ளார். அதில் முக்கியமான மசோதா அரசியலமைப்புச் சட்டத்தின் 130-வது சட்ட திருத்த மசோதா 2025 ஆகும்.
பிரதமர், மாநில முதலமைச்சர் மற்றும் அமைச்சர் பதவிகளில் இருப்போர் 5 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ள குற்ற வழக்குகளில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால், 31-வது நாள் அவர்களை பதவியிலிருந்து நீக்கலாம் என்பதே சட்ட மசோதாவின் சாராம்சம். இதன்படி பிரதமரை நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கும், முதலமைச்சரை நீக்கும் அதிகாரம் ஆளுநர்களுக்கும், அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கும் வழங்கப்பட்டுள்ளது.