உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்ற நிகழ்ச்சியில், ‘மனுக்கள் கொடுத்தால் குப்பைத் தொட்டிக்குத்தான் போகுது’ என பெண் குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, அந்த பெண் வசிக்கும் கிராமத்தில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாகை மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் சின்னத்தும்பூர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.