பெரம்பூர்: சென்னை அகரம் பார்த்தசாரதி தெருவை சேர்ந்தவர் கதிர் (எ) கதிரவன் (29). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. செம்பியம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன், கலையரசி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஒரு வருடத்திற்கு முன் கலையரசி, தனது கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தனது தாய் சித்ரா வீட்டுக்கு சென்று விட்டார்.
இதன்பிறகு கதிரவன் அடிக்கடி மாமியார் வீட்டிற்கு சென்று, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு மனைவியை அழைத்தும், அவர் மறுத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் மாமியார் வீட்டிற்கு வந்த கதிரவன், தன்னுடன் வரும்படி மனைவியை அழைத்துள்ளார். ஆனால், அவர் வர மறுத்துள்ளார். இதனால், மனமுடைந்த கதிரவன் பிளேடால் தனது வயிறு மற்றும் உடம்பில் பல இடங்களில் கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவருக்கு ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர கதிரவன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
The post மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி பிளேடால் வயிற்றை கிழித்து தற்கொலைக்கு முயன்ற ரவுடி appeared first on Dinakaran.