பெங்களூரு: சென்னையில் அண்மையில் நடைபெற்ற ‘தக் லைஃப்’ திரைப்பட நிகழ்வில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், “தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம்” என குறிப்பிட்டார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள கன்னட அமைப்பினர், அவருக்கு எதிராக பெங்களூரு போலீஸில் புகார் அளித்தனர். கர்நாடக முதல்வர் சித்தராமையா, பாஜக மாநில தலைவர் விஜயேந்திரா உள்ளிட்டோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.