மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை நகைச்சுவையாக விமர்சித்ததை அடுத்து ஆளும் கூட்டணியின் எதிர்ப்புக்கு உள்ளாகி உள்ள ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா, தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும், இந்த கும்பலைக் கண்டு தான் பயம் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனக்கு எதிராக எடுக்கப்பட்ட எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் காவல்துறை மற்றும் நீதிமன்றங்களுடன் ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறேன். நான் மன்னிப்பு கேட்க மாட்டேன். அஜித் பவார் (முதல் துணை முதல்வர்) மற்றும் ஏக்நாத் ஷிண்டேவைப் (2வது துணை முதல்வர்) பற்றித்தான் நான் பேசினேன். இந்தக் கும்பலைக் கண்டு நான் பயம் கொள்ளவில்லை. நான் என் படுக்கையின் கீழ் ஒளிந்துகொண்டு, பிரச்சினை ஓயட்டும் என காத்திருக்க மாட்டேன்.