ஜம்மு: “மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும் பாகிஸ்தானும் நெருக்கமாக வந்தன. ஆனால், அந்த நிலைமைக்கு என் வாழ்நாளில் நாம் மீண்டும் திரும்புவோம் என நான் கருதவில்லை” என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கிய நிலையில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோருக்கு அவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் அமைச்சர் சையத் குலாம் உசேன் கிலானி, முன்னாள் மாநிலங்களவை எம்பி ஷம்ஷேர் சிங் மன்ஹாஸ், முன்னாள் எம்எல்ஏக்கள் குலாம் ஹசன் பாரே, சவுத்ரி பியாரா சிங் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சட்டமன்றம் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தியது.