புதுடெல்லி: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, மகிழ்சியாக இருங்கள்; எந்தவித மன அழுத்தமும் இல்லாமல் நேர்மறை உணர்வுடன் தேர்வுகளை அணுகுங்கள் என்று அறிவுரை வழங்கி உள்ளார்.
மக்களுடன் உரையாடும் தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான மனதின் குரல்(மன் கி பாத்) நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "இது பத்தாம்-பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளுக்கான காலம். நம்முடைய இளம் நண்பர்கள், அதாவது தேர்வு வீரர்களுக்கு, நான் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எந்தவிதமான அழுத்தமும் இல்லாமல், நேர்மறை உணர்வோடு உங்கள் தேர்வுகளை எழுதுங்கள். ஒவ்வோர் ஆண்டும் தேர்வுகளை எதிர்கொள்வோம் (பரீக்ஷா பே சர்ச்சா) நிகழ்ச்சியில் நாம் நமது தேர்வெழுதும் வீரர்களுக்குத் தேர்வுகளோடு தொடர்புடைய பலப்பல விஷயங்கள் குறித்து விவாதிக்கிறோம்.