மதுரை: மருத்துவர்களை மரியாதைக் குறைவாகப் பேசும் மாவட்ட சுகாதார அலுவலரின் வீடியோ வெளியாகி சர்ச்சையான நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம், அவரது ஆய்வுக் கூட்டங்களைப் புறக்கணிக்கவும், போராட்டத்தைத் தீவிரப்படுத்தவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
மதுரை மாவட்ட சுகாதார அலுவலர் டாக்டர் குமரகுருபரன் சமீபத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் மருத்துவர்கள் பங்கேற்ற காணொலி ஆய்வுக் கூட்டத்தில் பேசும்போது மருத்துவர்களை மரியாதைக் குறைவாகவும், அநாகரிகமாகவும் பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதனால், அதிருப்தியடைந்த மருத்துவர்கள், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்திடமும், பொது சுகாதாரத்துறை இணை இயக்குநரிடமும் புகார் செய்தனர்.