புதுடெல்லி: இந்தியாவின் மருத்துவக் கல்லூரிகளில் ராகிங் கொடுமை உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகமாக உள்ளது. இந்த தகவலை நாடாளுமன்றத்தில் மத்திய மருத்துவ நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதன் மீதான ஒரு கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சரும் உ.பியை சேர்ந்தவருமான அனுப்பிரியா பட்டேல் கூறியதாவது: 2024 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரிகளில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 33 புகார்கள் பதிவாகியுள்ளன.