இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நேற்று காலை திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு அவர் வீட்டுக்குத் திரும்பினார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் அனுமதிக்கப்பட்டதாகச் செய்திகள் பரவியது.