தாம்பரத்தை அடுத்த காட்டாங் குளத்தூர் மற்றும் மறைமலை நகர் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நடை மேம்பால பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள்.
ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் ஒரு புறத்தில் இருந்து மற்றொரு புறத்துக்கு பாதசாரிகள் கடந்து செல்ல வசதியாக மறைமலைநகர் ரயில்வே நிலையம் அருகேயும் அதைத்தொடர்ந்து, அண்மையில் பொத்தேரி ரயில் நிலையம் அருகேயும் நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.