கோலாலம்பூர்: மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரி இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
கோலாலம்பூரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 65-ம் நிலை வீரரான இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், 33-ம் நிலை வீரரான அயர்லாந்தின் நகட் நுயென்னுடன் மோதினார். 59 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 23-21, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்று கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார். கால் இறுதி சுற்றில் ஸ்ரீகாந்த், பிரான்ஸின் டோமா ஜூனியர் போபோவுடன் மோதுகிறார்.