மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், மாணவர் விடுதிகளின் அவல நிலையை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆளுங்கட்சியின் கவனத்திற்கு வராத மக்கள் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தான் எதிர்க்கட்சிகளின் தலையாய பணி என்ற முறையில், மாணவர் விடுதிகள் குறித்த பிரச்சினையை மத்தியில் ஆளும் பாஜக அரசின் கவனத்திற்கு அவர் ஆக்கப்பூர்வமாக கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரியது. பீகார் மாநிலம் தர்பங்காவில் உள்ள பட்டியலின மாணவர்கள் தங்கிப் படிக்கும் அம்பேத்கார் மாணவர் விடுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டு அங்குள்ள குறைகளை ராகுல்காந்தி பட்டியலிட்டுள்ளார்.