கோவை: “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி செயல்படுவோம்,” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “டாஸ்மாக் ஊழல் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரிக்க உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அதில் தொடர்புடைய, துணை முதல்வரின் நண்பர்களான ரிதீஸ், ஆகாஷ் ஆகியோரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று அமலாக்கத்துறை கூறியுள்ளது. அவர்கள் ஏன் பயந்து வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும்?