மாநிலங்களவையில் சமாஜ்வாதி எம்.பி. ராம்ஜி லால் சுமனை பேச அனுமதிக்காததை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர்.
ராஜபுத்திர அரசர் ரானா சங்காவை துரோகி என சமாஜ்வாதி எம்.பி. ராம்ஜி லால் சுமன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆக்ராவில் உள்ள அவரது வீடு மீது கர்னி சேனா அமைப்பினர் கடந்த புதன்கிழமை தாக்குதல் நடத்தினர்.