புதுச்சேரி: புதுச்சேரிக்கு தனிமாநில அந்தஸ்து தொடர்பாக திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் கொண்டு வந்த தீர்மானம் அரசு தீர்மானமாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தனிமாநில அந்தஸ்து கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதை வலியுறுத்தி தனிமாநில அந்தஸ்து பெறுவோம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித்தலைவர் சிவா, நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன், அரசு ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ நேரு ஆகியோர் மாநில அந்தஸ்து வழங்க தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.