சென்னை: அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் (ஏஐஎப்எப்) ஆதரவுடன் மாநில அளவிலான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்துப் போட்டிகள் வரும் ஜூன் 20-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை நடைபெறவுள்ளன.
இதுதொடர்பாக தமிழ்நாடு கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தேசிய அளவிலான ஜூனியர் ஆடவர், மகளிர் கால்பந்துப் போட்டி ஜூலை 10-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை நடைபெற உள்ளன.