புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் வரும் மார்ச் 10-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது. மார்ச் 12-ல் பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேரவைத்தலைவர் செல்வம் கூறியதாவது: “புதுச்சேரி சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் வரும் மார்ச் 10-ல் காலை 9.30 மணிக்கு கூடுகிறது. அப்போது துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையாற்றுகிறார். அதைத்தொடர்ந்து மார்ச் 12ம் தேதி காலை 9.30 மணிக்கு வரும் 2025-26 பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் கூடி இக்கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்று முடிவு செய்யும்.