மார்ச் 10, 11 தேதிகளில் முதல்வர் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு வருகை தந்து 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக ஏற்பாடுகள் திவீரமாக நடைபெற்று வருகின்றன.
தமிழக முதல்வரின் செங்கை வருகை அட்டவணைப்படி, மார்ச் 10-ம் தேதி காலை 10.00 மணி பையனூர் சிப்காட்டில் கோத்ரேஜ் ஆலையை திறந்து வைக்கிறார். நெம்மேலி லீலாவதி திருமண மண்டபத்தில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். மறுநாள் 11ம் தேதி திருக்கழுகுன்றத்தில் ரோடு ஷோ – மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அதேபோல் ராட்டின கிணறு சந்திப்பு மேம்பாலம் கீழ்பகுதி முதல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை திருமணி சந்திப்பு வரை ரோடு ஷோ மாபெரும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.