சென்னை: வரும் 31-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறும் டிஜிபிக்கள் அபாஷ் குமார் மற்றும் அமரேஷ் புஜாரிக்கான பிரிவு உபச்சார விழா நேற்று நடைபெற்றது. இதில், டிஜிபி சங்கர் ஜிவால் கலந்து கொண்டு நினைவு பரிசு வழங்கி இருவரையும் பாராட்டினார்.
தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாக அபாஷ் குமார் பணியாற்றி வருகிறார். இவரது பணி காலம் இந்த மாதம் 31-ம் தேதியுடன் முடிவடைகிறது. பிஹார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட அபாஷ் குமார் பாட்னாவில் 07.03.1965-ல் பிறந்தார். பி.ஏ பட்டப்படிப்பு முடித்திருந்த அவர் தமிழக கேடரில் 1990-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.