ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்துவிட்டாலும் தேர்தல் களத்தில் பெரியார், பிரபாகரன், திராவிடம் பற்றி நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன் வைத்த விமர்சனங்கள் இன்னமும் சூடான விவாதத்தில் இருக்கின்றன. இந்நிலையில், அரசியலாளரும் பிரபாகரனுக்கு நன்கு பரிச்சயமானவரும் ‘கதைச் சொல்லி’ ஆசிரியருமான வழக்கறிஞர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பேட்டி இது.
பெரியாரையும் பிரபாகரனையும் எதிரெதிராக நிறுத்தும் சீமானின் அரசியலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?