டெல்டாவைச் சேர்ந்த அதிகாரக் கட்சியின் ‘கலைப்’ புள்ளிக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இனிஷியல் மாண்புமிகுவுக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஏழாம் பொருத்தம். மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தானும் நாட்டாமையாக வேண்டும் என்பது இனிஷியல் பார்ட்டியின் இஷ்டம். அதிகாரம் பறிபோகும் என்பதால் கலைப் புள்ளி இதற்கு எதிர்ப்பு.
இந்தப் பஞ்சாயத்து முன்பே ஒருமுறை ஆலயத் தலைமை வரைக்கும் வந்தது. அப்போது இருவரும் சமாதானமாகி, ‘இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன்… நீயும் வரக்கூடாது. பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ என்ற லெவலில் மாவட்டத்தைப் பாகம் பிரித்துக் கொண்டார்கள்.