சென்னை: நாட்டின் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை’ (Zero e-mission) தொடங்கியுள்ளதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம், கல்வி, திறன் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி முதல் கொள்கை, வெளிநடவடிக்கை மற்றும் பாதுகாப்பு வரை பல்வேறு களங்களில் மின்சார வாகனப் போக்குவரத்து முயற்சிகளின் விரிவான தொகுப்பான ‘கார்பன் உமிழ்வு இல்லா செயல்திட்டத்தை (Zero e-mission) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மேற்கொள்ளப்பட்டுவரும் முன்முயற்சிகள் வருமாறு: