சென்னை: ‘இந்தியாவில் மின்னணு சாதனங்களின் உற்பத்தி மையமாக தமிழகம் திகழ்கிறது’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தமிழ் மொழிக்காக பிரத்யேகமாக செயற்கை நுண்ணறிவு பணிகளை உருவாக்க ‘தமிழ் ஏஐ’ எனும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
இதற்காக சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா மற்றும் டெபோ டெக் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ள உள்ளது. அதன்படி தமிழ் செயற்கை நுண்ணறிவு (தமிழ் ஏஐ) திட்டத்தின் தொடக்க விழா சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.