மியான்மர் : மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்தனர். மியான்மரில் இன்று காலை 11.50 மணிக்கு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.2 ஆக பதிவானது. மீண்டும் 12 நிமிட இடைவெளியில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகி உள்ளது. மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.
The post மியான்மர் நாட்டில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 25 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.