மியான்மரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின்போது பல்வேறு மசூதிகளிலும் தொழுகையில் ஈடுபட்டிருந்த 700 முஸ்லிம்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இந்த 700 பேரும் ஏற்கெனவே ராணுவ அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த 1,700+ உயிரிழப்பு கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
மியான்மரில் கடந்த 28-ம் தேதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 புள்ளிகளாக பதிவான நிலநடுக்கத்தால், மண்டாலே நகரில் பல கட்டிடங்கள் இடிந்தன. அங்கு நிலவும் ராணுவ ஆட்சியால் போதிய வசதிகள் இல்லாமல் மீட்புப் பணி சுணக்கம் கண்டுள்ளது.