பாபி இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிரஞ்சீவி.
பாபி இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான படம் ‘டாக்கு மஹாராஜ்’. இப்படத்தினை தொடர்ந்து கே.வி.என் தயாரிக்கவுள்ள படத்தினை இயக்க ஒப்பந்தமானார் பாபி. தற்போது அக்கதையில் சிரஞ்சீவி நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பும் சிரஞ்சீவி பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது.